சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் 'ஸ்மார்ட் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' என்ற தொழில்நுட்பத்தை பார்த்து, ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வியந்து பாராட்டிய வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
மெரினா பீச்சுக்கு வந்த வெளிநாட்டு பயணி, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு வித்தியாசமான நீல நிற மெஷினை பார்த்தார். தன் கையில் இருந்த பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை மெஷினுக்குள் தூக்கி போட்டுள்ளார். அடுத்த நொடியே, 'சடசடவென' மற்றொரு மெஷினில் இருந்து ஒரு மஞ்சப்பை (துணிப்பை) வெளியே வந்துள்ளது.
காசுக்கு கூடப் பெறாமல், குப்பையாகத் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாகத் துணிப்பை வழங்கும் தமிழர்களின் இந்த அசாத்திய தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்த பயணி ஒருவர், இந்த சுற்றுச்சூழல் முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடற்கரை மணலிலோ அல்லது கடலிலோ வீசி எறிவதை தவிர்த்து, அவற்றை முறையாக மறுசுழற்சி செய்ய ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் மெரினா கடற்கரை தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாகவும் பராமரிக்கப்படுகிறது.