தமிழக செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2002-2006 ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ல் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவருக்கு எதிராக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வந்தது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த சொத்துக்கள் முடக்கத்திற்கு எதிராகவும் தனக்கு எதிராக அமலாக்கப்பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரீஷ் உபாத்யாய் மற்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு இடைக்காலத்தடை விதித்து விசாரணையை ஜூலை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்