தமிழக செய்திகள்

2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்; பணியைத் தொடங்கிய 'கழுகு' இயந்திரம்

2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'கழுகு' கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான பாதையை வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், 'பிளமிங்கோ' என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது.

கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 'கழுகு' என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து மயிலாப்பூர் (திருமயிலை) நோக்கி வெற்றிகரமாக மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து