தமிழக செய்திகள்

சென்னை: பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை, சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்துவருகிறது. இதனிடையே, மழையால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர்.

இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவரகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், படுகாயமடைந்த 30 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்