தமிழக செய்திகள்

சென்னை: ரெயில் நிலையத்தில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு

ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது திடீரென சுருண்டு விழுந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 45). இவர் நேற்று காலை திருப்பூர் செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்த சக பயணிகள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நரேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்