தமிழக செய்திகள்

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான திட்டம் டிசம்பர் 2024-க்குள் நிறைவடையும் - மத்திய மந்திரி நிதின் கட்கரி

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான திட்டம் டிசம்பர் 2024-க்குள் நிறைவடையும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் தொடங்கி மதுரவாயல் வரை உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வரும் 20.5 கிலோ மீட்டர் தொலைவிலான பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்று கூறியுள்ளார்.

இத்திட்டம் டிசம்பர் 2024-ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல் காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு