தமிழக செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள், வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம் என முழக்கமிட்டவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் ஆசிரியைகள், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை