கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னை - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்

சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் இன்று முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில் பாஸ்ட் மின்சார ரெயில் ஆகும். சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரெயில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக  இருக்கிறது. சென்னையில்  தினமும் வேலைக்கு சென்று வர இந்த மின்சார ரெயிலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் மின்சார ரெயில் என்பதால் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இந்த நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் (06033/06034) மே 2-ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி சென்னை - திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (06033) சென்னை கடற்கரையில் இருந்து இன்று (02.05.2024) மாலை 6 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும். அதே போல திருவண்ணாமலை - சென்னை செல்லும் சிறப்பு ரெயில் (06034) திருவண்ணாமலையில் இருந்து நாளை (03.05.2024) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு