சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.