தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி

மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது.

தினத்தந்தி

மன்னார்குடி:

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14,17,19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு செஸ் போட்டி மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செஸ் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு