தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை - நிர்வாகம் தகவல்

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. அதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.

அதற்கு பதிலாக வருகிற 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு