தமிழக செய்திகள்

டிரைவருக்கு நெஞ்சுவலி-பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்

டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும் பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.

சிங்கம்புணரி

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சிங்கம்புணரி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு 45 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை பொன்னமராவதி தாலுகா மதியானி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கருப்பையா ஓட்டினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்பீல்டு மேடு அருகே பஸ் சென்றபோது திடீரன டிரைவர் கருப்பையாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை மெதுவாக இயக்கி சிங்கம்புணரி பஸ் நிலையத்திற்குள் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். டிரைவர் கருப்பையாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். 

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்