தமிழக செய்திகள்

மழை பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

மழை பாதிப்பு குறித்து நாளை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், தான் விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதல்-அமைச்சர் கூறியிருந்தார்.

இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு வருகை தர உள்ளார்.

அப்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்