தமிழக செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2021-22ம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர்பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையாக சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

அதே போல் 2022-23ம் ஆண்டிற்கு விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் 19 ஆயிரத்து 282 விவசாயிகளுக்கு 34 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு 318 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்