கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இன்று திறந்துவைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத்திறனாளி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். அத்துடன், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத்திறனாளி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.  

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை