தமிழக செய்திகள்

ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறையில் ரெயில்வே கோட்ட மேலாளர், தலைமைச் செயலாளர், உள்ளிட்டோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சிறப்பு உதவி மையத்தில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெயில்வே அதிகாரிகளிடம் ரெயில் விபத்து, மீட்பு பணிகள் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை