தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் வருகை: காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி காஞ்சிபுரத்தில் நாளை (15.09.2023) அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை