தமிழக செய்திகள்

பூச்சி கடித்து குழந்தை சாவு

பூச்சி கடித்து குழந்தை இறந்தது.

தினத்தந்தி

திருக்காட்டுப்பள்ளி:-

பூதலூர் அருகே உள்ள சித்திரகுடிமெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் ராதிகா (வயது30). இவர் தஞ்சையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது ஆண் குழந்தை சரவணன், சம்பவத்தன்று வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பூச்சி ஒன்று குழந்தையை கடித்தது. இதில் மயங்கிய குழந்தையை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு