தமிழக செய்திகள்

சித்ரா பவுர்ணமி கிரிவலம்

தோரணமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.

தினத்தந்தி

கடையம்:

கடையம் அருகே உள்ள தேரணமலை முருகன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள வல்லப கணபதிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் முதலில் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பின்னர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தை எழுப்பியவாறு கிரிவலம் வந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்