தமிழக செய்திகள்

அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு

அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அரிகுமார் (வயது 14). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அரிகுமார், வீட்டின் அருகில் உள்ள கள்ளிகுப்பம் ஏரி அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் இறங்கி கால் கழுவ முயன்ற அரிகுமார் நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் மூழ்கி பலியான அரிகுமார் உடலை மீட்டனர். இது குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து