கோவை,
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும். 19 வயது வாலிபர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் கர்ப்பமானார். இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.