தமிழக செய்திகள்

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன் - திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியை கத்தியால் குத்தியதை தடுக்க முயன்ற பாட்டியையும் சிறுவன் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதனால் மாணவியின் பாட்டிக்கும் காதில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன் மாணவி வீட்டில் சிறுவன் செல்போன் திருட முயற்சி செய்ததாகவும் அதனை கண்டித்ததால் ஆத்திரத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்