தமிழக செய்திகள்

வகுப்பறைகளை சீரமைக்க வேண்டும்

தூதூர்மட்டம் அரசு பள்ளியில் வகுப்பறைகளை சீரமைக்க வேண்டும் என்று மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

குன்னூர் அருகே தூதூர்மட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் சுமதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் அருண்ராஜூக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் கழகத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை