தமிழக செய்திகள்

ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி

திருவாடானையில் தேரோட்டத்தையொட்டி ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

தினத்தந்தி

தொண்டி, 

திருவாடானையில் தேரோட்டத்தையொட்டி ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கொடியேற்றம்

திருவாடானையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேக வல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளையொட்டி வருகிற 11 -ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி தூசி படிந்த நிலையில் இருந்த சாமி அம்மன், தேரின் மேற்கூரைகள் மற்றும் பாதுகாப்பு தகரங்கள் அகற்றப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

சுத்தம் செய்யும் பணி

இதனால் 2 தேர்களிலும் தூசி அதிக அளவு படிந்து இருந்தது. இதனையொட்டி தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 தேர்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு