தமிழக செய்திகள்

ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளின் உதவியுடன் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் லெட்சுமி சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகி அரிமா அருணாச்சலம், முன்னாள் செயலாளர் ரஜினி, முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி தாளாளர் எழில்வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

வட்டார தலைவர் இளங்கோ கண் தான விழிப்புணர்வு உரையாற்றி கண் தான சுற்றறிக்கை வழங்கினார். கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைச் செயலாளர் தங்கராஜ் தொகுப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் தலைவர் கவுதமன், முன்னாள் செயலாளர் ஆனந்த், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு