தமிழக செய்திகள்

கொடைக்கானல் ஏரியில் தூய்மை பணி

உலக சுற்றுலா தினத்தையொட்டி கொடைக்கானல் ஏரியில் தூய்மை பணியை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத்துறை சார்பில் தூய்மை பணி தொடக்க விழா கொடைக்கானல் காந்தி சிலை அருகே நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கி, கொடி அசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மாயக்கண்ணன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, சுகாதார ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், சுற்றுலா வழிகாட்டி சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் கொடைக்கானல் ஏரியை சுற்றி தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும் சமூக நலத்துறை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் ஒரு நாள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதேபோல் 'சுற்றுலா தின விழா' என்பதை கருப்பொருளாக கொண்டு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்று உதவி சுற்றுலா அலுவலர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு