தமிழக செய்திகள்

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்

433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி இ, பி டெக், ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படாத நிலையில், 9 கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2024 -25-ம் கல்வி ஆண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டைப் போலவே அதற்கு முந்தைய ஆண்டும் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து