தமிழக செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 772 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.10-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 657-க்கு ஏலம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.36-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.23-க்கு விற்பனை நடந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 290-க்கு தேங்காய் ஏலம் போனது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்