தமிழக செய்திகள்

கோவை: தனியார் பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே தனியார் பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் இருந்து இன்று காலை பொள்ளாச்சி நோக்கி தனியார் பஸ் வந்துக் கொண்டிருந்தது.

இந்த பஸ் ஐய்யம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு