தமிழக செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில், டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிறுமி பலியானார்கள்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் தர்னிஷ் (வயது 8). இவனுக்கு கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சல் இருந்தது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் தர்னிஷ் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவனை மேல்சிகிச்சைக்காக கடந்த 4-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தர்னிஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தான்.

அதுபோன்று திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சிலுவை புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் ஜெசிந்தா (5). இவளுக்கு தீராத காய்ச்சல் இருந்ததால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஜெசிந்தாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவள் கடந்த 3-ந் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெசிந்தா நேற்று பரிதாபமாக இறந்தாள். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, பொதுவாக டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த காய்ச்சலை கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...