தமிழக செய்திகள்

கோவை: குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி முதல் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்ததால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைஅளவு குறைந்துள்ளதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்து உள்ளது.

மேலும் அங்கு கொரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுற்றுலா பயணிகள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்