தமிழக செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் மத்திய, மாநில அரசின் நிதி ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்களாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே அறை, ஸ்கேன் செய்யும் அறை, கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டு வரும் புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, இளநிலை பொறியாளர் சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்