தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு வழங்கப்படும்உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தா.

தினத்தந்தி

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காணை ஊராட்சி ஒன்றியம் பெரும்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவின் தரத்தை பார்வையிட்டதோடு அந்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு சுகாதாரமாக காலை உணவு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவை உண்டு சுவை மற்றும் தரத்தை உறுதி செய்ய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு