தமிழக செய்திகள்

கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பலி

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி கொண்ட விபத்தில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பலியானார். மேலும் அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி கொண்ட விபத்தில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பலியானார். மேலும் அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

கலெக்டர் அலுவலக ஊழியர்

வேளாங்கண்ணி அருகே கீழையூர் அருகே நீர்முளை பள்ளியமூலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மனைவி செயலா(வயது 40). இவர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தனது மகன் பாலாவுடன்(17), நாகையில் இருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை செயலா ஓட்டி சென்றார்.

மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்

கிழக்கு கடற்கரை சாலையில் ஈசனூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு செயலா மற்றும் அவரது மகன் பாலா படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செயலாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

படுகாயம் அடைந்த பாலா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்