தமிழக செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர் கைது

தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த மாதவரம் பஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இளம்பெண்ணுடன், வாலிபர் சுற்றி திரிவதை கண்டு அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அவர், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து சிறுமியை கடத்தியதாக கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், இதுபற்றி தெலுங்கானா மாநில போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து மாதவரம் வரவழைத்து அவர்களிடம் சிறுமியை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்