தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி சக்திவிநாயகர்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகள் அகிலா (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டா. இதனால் அகிலா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அகிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT