தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை

படிப்புக்கு பணம் கட்ட முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

போத்தனூர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது43). டிரைவர். இவருடைய மகள் நளினி (18). இவர் ஈச்சனாரி சிட்கோ பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் கேட்டுள்ளார். அவர்கள் அடுத்த வாரம் பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மனவேதனை அடைந்த நளினி வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை