தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தாம்பரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாலினி தமைமையிலான தனிப்படையினர் நேற்று பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டபொம்மன்நகர், கணேஷ் அவென்யூவில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(வயது 21) என்பதும், பல்லாவரம் தனியார் பல்கலை கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டம் படித்து வருவதும், மற்றொருவர் விருத்தாசலத்தை சேர்ந்த சையது நசீர் பாஷா(22) என்பதும், பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் வருடம் படித்த இவர், செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வு எழுத நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருப்பதும் தெரிந்தது.

அவர்களது அறையில் சோதனை செய்தபோது 12 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா போதைக்கு அடிமையான இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்றதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து