தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்

மருதூரில் இந்திய கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த மருதூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 36 ஊராட்சி மன்ற பகுதிகளுக்கும் சரிவர கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வராததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்ட பணிகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் தொழிலாளிகளுக்கு உடனடியாக 100 நாள் வேலை வழங்க கோரியும் செல்வராஜ் எம்.பி. தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) தகட்டூர் கடைத்தெருவில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்