தமிழக செய்திகள்

சமுதாய வளைகாப்பு

கூடலூரில் நடந்த சமுதாய வளைகாப்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

கூடலூர்

நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கூடலூர் 1-ம் மைல் விளையாட்டு அரங்கில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அருணா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது அமைச்சர் தனது சொந்த செலவில் தலா ரூ.1,000 வழங்கினார். பின்னர் பழங்கள் மற்றும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT