தமிழக செய்திகள்

கருணை அடிப்படை பணியை உரிமையாக கோர முடியாது - ஐகோர்ட்டு கிளை

அரசுப் பணியில் இருந்த போது தந்தை உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் பணிக் கோரி மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை.

அரசுப் பணியில் இருந்த போது தந்தை உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் பணிக் கோரி மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது,கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான்"இதை வெகுகாலம் காத்திருப்பில் வைக்க இயலாது.

கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள் பணியில் இருந்தவர்கள் இறந்தநாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர வயது வரம்பு பூர்த்தி ஆனதிலிருந்த்து 3 ஆண்டுகளுக்குள் அல்ல.மனுதாரர் தான் வயது வரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து விண்ணப்பித்துள்ளதாக கூறுவதை ஏற்க இயலாது ,என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.