தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி பஸ் நிலையம், காந்தி சிலை, மதுரை ரோடு, புதுக்கோட்டை ரோடு, அண்ணா சிலை, சிவகங்கை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடை, மளிகை கடைகள், பேக்கரிகள் மற்றும் பழக்கடைகளில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக அரசால் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்துவதோ, விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு