தமிழக செய்திகள்

தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளை கைப்பற்றி அம்மாநில மக்களின் ஆதரவை பெற்றுள்ளது, ஆம் ஆத்மி கட்சி. டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது. உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்கு உரியது.

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை