தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் இணைந்த காங்கிரஸ், த.வெ.க. நிர்வாகிகள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்.மாளிகையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (21.7.2026 செவ்வாய்க்கிழமை), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் C. ஜெகன்ராஜ், மேல்புறம் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் ராஜேந்திரன், விளவன்கோடு தொகுதி மாணவர் காங்கிரஸ் செயலாளர் M.S. அபிஜித், காங்கிரஸ் பளுகல் பேரூராட்சி முன்னாள் செயலாளர் V. விஜின், த.வெ.க-வைச் சேர்ந்த களியக்காவிளை பேரூராட்சி தலைவர் க. சரண், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை மாவட்ட துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் B. ஆன்றனி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை அமைச்சருமான நாஞ்சில் M. வின்சென்ட், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் R. ஜெயசுதர்ஷன், முஞ்சிறை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் K. ஷாஜிகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.