தமிழக செய்திகள்

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம்

சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம் வேலூரில் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கையின்படி குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் (மினி டெக்ஸ்டைல் பார்க்) அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை வேலூர் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்வதற்கு ஏதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை