கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தொடரும் காவல் மரணங்கள்: முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத த.வெ.க. அரசுக்கு கண்டனம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தொடரும் காவல் மரணங்கள். முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்-அமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?

Accountability, Apology - முதல்-அமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.