தமிழக செய்திகள்

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் செல்வம் என்பவர் கடந்த 1 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். பொக்லைன் எந்திர டிரைவரான செல்வத்தை நேற்று அந்த பகுதி பெண் அதிகாரி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை மற்றும் நண்பகல் பணிபுரியக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் மாநகராட்சி 15-வது மண்டலம் அருகே பள்ளிக்கூட சாலையில் உள்ள ஒப்பந்ததாரர் அலுவலகம் வெளியே ஊழியர்கள் குழுமி இருந்த தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியரை தரக்குறைவாக பேசிய பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரியிடம் போலீசார் ஊழியர்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து