தமிழக செய்திகள்

புதுச்சேரியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,092 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...