தமிழக செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தினத்தந்தி

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது வரை 75 ஆயிரத்து 2 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா பாதிக்கப்பட்ட 59 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு