தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா - மலேசியாவில் இருந்து வந்தவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மலேசியாவில் இருந்து வந்த குடும்பத்தினர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

மலேசியாவில் இருந்து வந்த கணவன், மனைவி மற்றும் 7 வயது சிறுமி ஆகிய மூவரும், விநாயகர் நகர் பகுதியில் உள்ள அவர்களின் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளனர். இதில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், 7 வயது சிறுமியைத் தவிர மீதி 8 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதி 6 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 33 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரின் பரிசோதனை முடிவுகள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்